Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்!
தமிழக ஊடகங்கள் குறித்த
Recommended Video
சென்னை: தமிழக ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்து பாடகி சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சிக்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீதும் பிரபல நடிகைகள் மீ டூ புகார்கள் கூறினர்.
இந்நிலையில், தமிழக ஊடகங்களுக்கு எதிராக சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பதிவில் அவர், "என்னுடைய பிரச்சினையை டெல்லி மற்றும் மும்பை மீடியாக்கள் கையில் எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் அது பற்றி பேசப்பட்டது. இதனால் அந்த மீடியாக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இங்கிருக்கும் சிலர் இப்பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாமே லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் செய்தி போடுகிறார்கள். இங்கு யாரும் உண்மையைப் பேசுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலமே இந்தப் பிரச்சினை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சின்மயியின் புகார் குறித்து, பல பிரபலங்களிடமும் ஊடகங்களால் கருத்து கேட்கப்பட்டது. ஊடகங்களின் பங்களிப்பினாலேயே மேலும் பல பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பேச முன்வந்தனர்.
ஆனால், இதனையெல்லாம் மறந்து, தமிழக ஊடகங்களை காசு வாங்கிக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுபவர்கள் என தரக்குறைவாக சின்மயி விமர்சித்திருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சின்மயிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!