Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வைரமுத்துவை பிளாக்மெயில் செய்தார் சின்மயி: ராதாரவி
Recommended Video
சென்னை: சின்மயி சொல்வது எல்லாம் பொய் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
சின்மயி 2 ஆண்டு சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் தான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
வைரமுத்து
சின்மயி வைரமுத்து உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் உடனே டப்பிங் சங்கத்தின் பக்கம் திரும்பிவிட்டார். சின்மயி முருகா என்றால் கூட மீ டூ தான் நினைவுக்கு வருகிறது. சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது.
வங்கி கணக்கு
வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து விஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும். எல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.
பாலியல் தொல்லை
சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.
டப்பிங் சங்கம்
சின்மயி உள்நோக்கத்துடன் தான் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். விஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா? அப்படி இல்லையே. அதனால் தான் சொல்கிறேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குற்றம் என்கிறார் ராதாரவி.