Don't Miss!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தேவதாசி முறை சூப்பர் சிஸ்டம்.. சின்மயி தாயார் சர்ச்சை.. அம்மாவிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட மகள்!
தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது என்று தனது தாயார் பேசியதற்காக சின்மயி டிவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை: தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது என்று தனது தாயார் பேசியதற்காக சின்மயி டிவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
#metoo உலகம் முழுக்க பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட சமயத்தில் பல முக்கிய நபர்கள் அதில் சிக்கினார்கள். இந்தியாவில் வடக்கில் பலர் இதனால் விமர்சனத்திற்கு உள்ளானார்கள். தமிழகத்திற்கு #metoo டிரெண்டை கொண்டு வந்தவர் பாடகி சின்மயி.
எந்த நடவடிகைக்கும் அஞ்சாமல் மீ டூ மூலம் பல பேர் குறித்து வெளிப்படையாக இவர் புகார் அளித்தார். அதேபோல் பல பெண்கள் வெளியே வந்து பேசவும் இவர் ஊக்குவித்தார்.
தாயார்
இந்த நிலையில் சின்மயி தாயார் இதற்கு எதிர்மறையாக பேசி உள்ளார். அவர் தனது பேச்சில், தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட ஒசத்தியான சிஸ்டம். அதை சிதைச்சதனால நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன், என்று தனியார் செய்தி நிறுவன விவாத நிகழ்ச்சியில் பாடகி சின்மயி தாயார் குறிப்பிட்டு இருந்தார்.
சர்ச்சை
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது.இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சின்மயி பெண்கள் குறித்து முற்போக்கான கருத்துக்களை பகிர்கிறார்.
ஆணாதிக்கம்
ஆணாதிக்கம் குறித்தும், பெண் பாதுகாப்பும் குறித்தும் பேசுகிறார். மிக முக்கியமாக #metoo மூலம் பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரின் தாயார் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கேள்வி
இது தொடர்பாக சின்மயியை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். உங்கள் தாயார் பேசியது தவறு. கண்டனத்திற்கு உரியது. சமூக மாற்றத்தை முதலில் உங்கள் தாயிடம் இருந்து தொடங்குங்கள் என்று குறிப்பிட்டனர்.
எப்படி
இதற்கு தற்போது சின்மயி பதில் அளித்துள்ளார். அதில், தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால் என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை.
|
அவங்கதான்
அவங்க செயலுக்கு அவங்கதான் பொறுப்பு. ஆனாலும் மனம் புண்பட்டவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்று சின்மயி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
-
Vijay: விமான நிலையத்தில் விஜய்க்காக காத்திருக்கும் கேரள ஃபேன்ஸ்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை