Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மனநலம் பாதிக்கப்பட்டேனா... அவதூறு கருத்து தெரிவித்த டாக்டர்...கொந்தளித்த சின்மயி
சென்னை : சமீபத்தில் ட்விட்டரில் கிளப்ஹவுஸ் என்ற விவாதம் தளம் புதிதாக துவங்கப்பட்டது. இதில் இணைந்து பொதுவான தலைப்புகளின் மீதான விவாதத்தில் பங்கேற்று, நமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Recommended Video
ஆனால் இந்த தளத்தை பலரும் பிரபலங்கள் பற்றி அவதூறான, தகாத கருத்துக்களை கூறவே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்த நபர் ஒருவர் பிரபில பின்னணி பாடகி சின்மயி பற்றி அவதூறு கருத்துக்களை கூறி உள்ளார்.
மன்னிப்பை ஏற்க மறுத்த சின்மயி
இதனால் டாக்டர் அரவிந்த் ராஜா என்ற அந்த நபர் மீது தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார். அந்த நபர் மன்னிப்பையும் ஏற்க சின்மயி மறுத்துள்ளார்.
சின்மயி பற்றி அவதூறு கருத்து
டாக்டர் அரவிந்த் ராஜா என்பவர் கிளப்ஹசில், பாடகி சின்மயி காஞ்சிபுரத்தில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மனநல சிகிச்சை பெற்றார் என தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் இதனை தன்னிடம் சொன்னதாகவும், சின்மயியின் தற்போதைய மனநலம் குறித்தும் தனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
விட்டு விலாசிய சின்மயி
மேலும் மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாகவும், சின்மயி உள்ளிட்ட மற்ற பெண்கள் மீது அவதூறாகவும் கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக அந்த டாக்டருக்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து விட்டார்.
|
பேச மறுத்த சின்மயி
இதனையடுத்து அரவிந்த் ராஜா, சின்மயியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அதனை ஏற்க சின்மயி மறுத்து விட்டார். சின்மயி மற்றும் அவரது தாய்க்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால் அவரிடம் பேச சின்மயி மறுத்து விட்டார்.
சட்ட நடவடிக்கை எடுப்பேன்
மேலும் டாக்டர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்திய மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்க உள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த முடிவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். பலரும் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.