Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திமுக கூட்டணியை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம்!
பிரஜா ராஜ்யம் எனும் பெயரில் தனிக் கட்சி கண்ட சிரஞ்சீவி, தொடர்ந்து அக்கட்சியை நடத்த முடியாமல், காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் இணைப்பு விழா பிரமாண்ட முறையில் சோனியா காந்தி முன்னிலையில் நடக்க உள்ளது.
இந்த இணைப்பு விழா குறித்து டெல்லியில் தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத்தை சிரஞ்சீவி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகம் மற்றும் புதுவையில் சிரஞ்சீவி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் உள்ளதால், அவரது பிரச்சாரம் நல்ல பலனைத் தரும் என அவரிடம் கூறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, "தமிழகத்தில் நான்கு நாட்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவிக்கிறேன். புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்யப் போவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.