Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திமுக கூட்டணியை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம்!
பிரஜா ராஜ்யம் எனும் பெயரில் தனிக் கட்சி கண்ட சிரஞ்சீவி, தொடர்ந்து அக்கட்சியை நடத்த முடியாமல், காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் இணைப்பு விழா பிரமாண்ட முறையில் சோனியா காந்தி முன்னிலையில் நடக்க உள்ளது.
இந்த இணைப்பு விழா குறித்து டெல்லியில் தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத்தை சிரஞ்சீவி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகம் மற்றும் புதுவையில் சிரஞ்சீவி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் உள்ளதால், அவரது பிரச்சாரம் நல்ல பலனைத் தரும் என அவரிடம் கூறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, "தமிழகத்தில் நான்கு நாட்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவிக்கிறேன். புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்யப் போவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.