Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வறுமையால் விருதுகளை விற்ற காமெடி நடிகை... கைகொடுத்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி
ஐதராபாத் : தெலுங்கில் சிறப்பான காமெடி நடிகையாக வலம்வந்தவர் பவள சியாமளா.
அவர் தான் மிகுந்த வறுமையில் வாடி வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
குவியும் பிரார்த்தனைகள்...ட்விட்டர் டிரெண்டிங்கில் விஜயகாந்த்
தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக தான் பெற்ற விருதுகளை விற்று விட்டதாகவும் கூறியிருந்தார்.
பவள சியாமளா அவதி
தெலுங்கில் பழம்பெரும் நடிகையான பவள சியாமளா, சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார்.
சிரமமான வாழ்க்கை
இவரது கணவர் இறந்த நிலையில், மகளும் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதையடுத்து வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக உள்ளதாக இவர் தெரிவித்திருந்தார். தன்னுடைய வயிற்றுப் பாட்டிற்காக தன்னுடைய விருதுகளை விற்று விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார்.
பென்ஷன் கிடைக்க ஏற்பாடு
இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்வியுற்ற தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான செக்கை அவரது உதவியாளர் சியாமளாவிடம் கொடுத்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார்.
குவியும் பாராட்டு
சிரஞ்சீவியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வறுமையால் தவித்துவந்த சியாமளா விருதுகளை விற்று தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிய சம்பவம் வெளியாகி பல்வேறு தரப்பினரின் வேதனைக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் இந்த உதவி அவரது வாழ்க்கையை ஓரளவிற்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.