Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல முன்னணி ஹீரோக்களை விடாமல் துரத்திய தேனீக்கள்.. பத்திரமாகக் காப்பாற்றிய பாதுகாவலர்கள்!
ஐதராபாத்: பிரபல முன்னணி நடிகர்களை தேனீக்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் மகன் ராம் சரண். இவரும் அங்கு முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.
சிரஞ்சீவியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கின்றனர்.
குர்தாவில் கிளாமர்..பட்டனை போடுங்க ப்ளீஸ்.. சாயிஷாவுக்கு ரசிகர் அட்வைஸ்!
லாக்டவுன்
நடிகர் சிரஞ்சீவி, இப்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது. அவர் விலகியதை அடுத்து இப்போது காஜல் அகர்வால் நடித்து வருகிறார். ராம் சரண் தேஜா தயாரிக்கிறார். லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ்
இந்நிலையில் ராம்சரணின் மனைவி உபசனாவின் தாத்தா உமாபதி ராவ் கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அவரது இறுதிச்சடங்கு தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள டோமகொண்டா என்ற பகுதியில் நேற்று நடந்தது. இதில் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
தேனீக்கள் விரட்டியது
இறுதிச் சடங்குக்காக வீட்டில் இருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், உபசனா ஆகியோர் வெளியெ வந்தனர். அப்போது, திடீரென்று கூட்டமாக வந்த தேனீக்கள் விரட்டியது. இதைக் கண்டதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைகளால் தேனீக்களை அவர்கள் விரட்டினர். முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர்.
பாதுகாவலர்கள்
நடிகர் சிரஞ்சிவீ மற்றும் ராம் சரணின் பாதுகாவலர்கள் உடனடியாகத் துணியால் அவர்களை மூடி, அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், தேனீக்களின் கடியில் இருந்து அவர்கள் தப்பினர். ஆனால் அங்கிருந்த சிலரை தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.