Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிரஞ்சீவி மகளுக்கு 2வது திருமணம்... சித்தப்பா பவன் கல்யாண் வரவில்லை!
பெங்களூர்: சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவின் 2 வது திருமணம் நேற்று பெங்களூரில் கோலாகாலமாக நடந்து முடிந்தது.
பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஜா
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கடந்த 2007 ம் ஆண்டு வீட்டை விட்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது தந்தை மற்றும் உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். காதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்த ஸ்ரீஜா மீண்டும் பெற்றோரிடம் வந்து தங்கிவிட்டார்.
|
2 வது திருமணம்
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீஜாவின் பெற்றோர் அவருக்கு 2 வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை தேடிவந்தனர். முடிவில் சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரின் மகனான கல்யாண் என்பவரை மணமகனாக தேர்வு செய்தனர். கல்யாண் ஒரு என்ஆர்ஐ தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூரில்
நேற்று ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் கோலாகாலமாக நடந்தது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் தவிர்த்து நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சிரஞ்சீவி சகோதரர் பவன் கல்யாண் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்ததால் இந்தத் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
வரவேற்பு
ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பு வருகின்ற 30 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த வரவேற்புக்கு நடிக, நடிகையர் மற்றும் அரசியல்வாதிகளை அழைக்க சிரஞ்சீவி திட்டமிட்டிருக்கிறார்.