Don't Miss!
- News
திடீரென எரிந்த "சிவப்பு லைட்!" நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி!இண்டிகோ விமானத்தில் பரபர
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது’’..அப்பா போட்டோவை தொட்டுப் பார்க்கும் மகன்..கண்கலங்கிய மேக்னா!
சென்னை
:
மறைந்த
கன்னட
நடிகர்
சிரஞ்சீவி
சர்ஜாவின்
இரண்டாம்
ஆண்டு
நினைவு
நாளில்
நினைவிடத்திற்கு
குழந்தையுடன்
வந்து
அஞ்சலி
செலுத்தினார்
நடிகை
மேக்னா.
Recommended Video
நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாயும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். இதையடுத்து, 2018ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 'ஷிவார்ஜுனா' என்ற படத்தில் நடித்து இருந்தார்.
பெற்ற
தாய்க்கு
ஆபத்தான
நிலை,ஷூட்டிங்
கேன்சல்...இயக்குநருக்காக
அருள்நிதி
செய்த
காரியம்
என்ன
தெரியுமா?

சிரஞ்சீவி சர்ஜா
இதையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தனது வீட்டில் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சை பிடித்தபடி சாய்ந்தார். சற்று நேரத்தில் சிரஞ்சீவி சுயநினைவை இழந்து மயங்கினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

7 மாத கர்ப்பிணி
39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தது கன்னட திரையில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சர்ஜா இறந்த போது அவரது மனைவி மேக்னா ராஜ் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தன் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். அந்த நேரத்தில் மேக்னாவின் நிலையை பார்த்து கல் நெஞ்சமும் கலங்கியது.

புகைப்படத்திற்கு முன் வளைகாப்பு
இதையடுத்து, மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார். அவ்வப்போது கணவர் புகைப்படத்தை குழந்தைக்கு காட்டி இவர் தான் அப்பா என கூறி வருகிறார். மேக்னா தனது வளைகாப்பையும் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்திற்கு முன் நின்றே நடத்திக் கொண்டார்.

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது
இந்நிலையில், சிரஞ்சீவி சர்ஜாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஜூன் 6ந் தேதி அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. அதற்கு தனது மகன் ராயன் ராஜ் சர்ஜாயுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் மேக்னா. அப்போது தன் குழந்தைக்கு இவர் தான் அப்பா என்று அவரது புகைப்படத்தை காட்டி கண் கலங்கினார் மேக்னா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது என்று பலரும் கலங்கிய மனதுடன் மேக்னாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.