Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி!
சென்னை : நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் வக்கீல் சாப் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது
பிரபல ஹிந்தி திரைப்படமான பிங்க் ஏற்கனவே தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இப்போது தெலுங்கில் வக்கீல் சாப் பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
அறிவே இல்லையா.. தியேட்டர் ஸ்க்ரீனில் ரத்தத்தால் பவன் கல்யாண் பெயர் எழுதிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் தம்பி பவன் கல்யாணின் படத்தை காண சிரஞ்சீவி தன்னுடைய குடும்பத்தாருடன் திரையரங்கிற்கு வந்து படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார் .
வக்கீல் சாப்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யான் இருவரும் சகோதரர்கள் என்பது பலரும் அறிந்ததே. இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்திருக்க இப்பொழுது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் வக்கீல் சாப் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 9
சென்ற ஆண்டு வெளியாக இருந்து பின் கொரானா சூழல் காரணமாக தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருந்த இதன் ரிலீஸ் தேதி நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி ஆரவாரமாக வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் களைகட்டியுள்ளது.
தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல்
ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏற்கனவே வெளியான கதை தான் என்றாலும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை அமைத்து இவற்றில் உள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். மேலும் இதில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடித்திருக்க பாதிக்கப்பட்ட பெண்களாக நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிரஞ்சீவி குடும்பத்துடன்
படம் வெளியானது முதலே ரசிகர்கள் கூட்டம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிய நடிகர் சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணின் திரைப்படத்தை காண திரையரங்குக்கு நேரடியாக குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ்ந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.