ஃபேஸ் ஆப் மூலம் குட்டி பாப்பாவான சித்து.. எப்படி இருக்காங்க பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை சித்ரா குட்டி பாப்பாவா இருக்கும் ஃபேஸ் ஆப் போட்டோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகையான சித்ரா மரணமடைந்து 15 நாட்கள் கடந்து விட்டன. இன்னமும் அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனிடையே சித்ராவின் கணவர், கணவர் குடும்பத்தினர், நண்பர்கள் வட்டம், அக்கம் பக்கத்து வீட்டார் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

250 பக்க விசாரணை அறிக்கை
சித்ரா திருமணம் ஆகி இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்ததால் அவரது மரணம் ஆர்டிஓ அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டிப்பாப்பாவாக..
சித்ரா தொடர்பான வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் போட்டோக்கள் ஃபேஸ் ஆப் மூலம் குட்டிப்பாப்பாவாக மாற்றப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம க்யூட் போட்டோ..
கொழுக் மொழுக் கன்னங்களுடன் குட்டி பாப்பாவாக உள்ள செம க்யூட்டாக உள்ளார் சித்ரா. அவர் சிங்கிளாக இருந்தது முதல் நிச்சயதார்த்தம் வரை சித்ராவின் போட்டோக்கள் அப்படியே குட்டி பாப்பாவாக மாற்றப்பட்டுள்ளது.

என்ன அவசரம் சித்ரா..
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் குழந்தையாய் இருந்தாலும் எவ்வளவு க்யூட் என தங்களின் கருத்துக்களை வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அதற்குள் என்ன அவசரம் சித்ரா, இப்படி போய்விட்டீர்களே என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











