Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.. கடைசி சண்டையில் கதறிய சித்ரா.. வெளியான திடுக் தகவல்!
சென்னை: கடைசியாக நடந்த சண்டையின் போது நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என சித்ரா தனது கணவர் ஹேமந்திடம் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல விஜேவும் சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 9ஆம் தேதி அதிகாலை நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா. வரும் பிப்ரவரி மாதம் பிரபலங்களை அழைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இந்த மாதம் நடக்க இருந்த.. பிரபல பாடகியின் 2 வது திருமணம்.. அடுத்த வருஷம் தள்ளிப் போச்சாமே!

ஸ்டார்ட் மியூஸிக்
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சித்ரா. தொடர்ந்து நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியுள்ளார் சித்ரா.

ஹேமந்த் கோபம்
ஏற்கனவே சித்ரா சீரியலில் சில காட்சிகளில் சக நடிகர்களுடன நெருக்கமாக நடிப்பது அவரது கணவர் ஹேமந்துக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பல முறை ஹேமந்த் சித்ராவிடம் நடிக்கக்கூடாது என சண்டை போட்டு வந்துள்ளார்.

ஷுட்டிங் ஸ்பாட்டில் சண்டை
மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்று சித்ராவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அதிகாலை ஷூட்டிங் முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இதன் முடிவில் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே அவரது மரணம் தற்கொலைதான் என தெரியவந்தது.

நகக் கீறல்கள்
பெரும் சந்தேகங்களை எழுப்பிய அவருடைய முகத்தில் இருந்த நகக்கீறல்கள், அவருடையது தான் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சித்ரா மரணமடைந்த 6 நாட்கள் ஆன நிலையில், அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

நேற்றிரவு கைது
vஅடிதல் அதிகாலையில் சித்ராவுடன் தான் சண்டை போட்டதையும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரில் அழைத்து வந்த
இந்நிலையில் போலீஸ் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ஹேமந்த். கடந்த புதன் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சித்ராவை காரில் அழைத்து வந்துள்ளார் ஹேமந்த்.

ஹோட்டல் அறையில்
காரிலேயே சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகருடன் சேர்த்து வைத்து சந்தேகத்துடன் பேசியுள்ளார். காரில் தொடங்கிய இந்த வாக்குவாதம் ஹோட்டல் அறையிலும் தொடர்ந்துள்ளது.

உங்களை சாந்திருக்கிறேன்
வாக்குவாதம் முற்ற சந்தேகத்தின் உச்சத்தில் கடுமையாக சித்ராவை வசைபாடிய ஹேமந்த், யாருடன் ஆட்டம் போட்டாய் என்று கேட்டு ஆபாசமாக பேசியிருக்கிறார். தன் மீது சந்தேகப்படும் கணவரிடம், நான் உங்களைதான் சார்ந்திருக்கிறேன்.

செத்துத்தொலை..
நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கெஞ்சியுள்ளார் சித்ரா. அதற்கு இருக்க முடியாது என்றால் செத்துத் தொலை என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுள்ளார் ஹேமந்த்.

இறுதி முடிவு
காதல் கணவருக்கு தன் மீது ஏற்பட்ட வெறுப்பு மற்றும் சந்தேகத்தால் விரக்தியடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனிடையே சித்ராவின் மாமனார் மற்றும் மாமியாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.