Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. நள்ளிரவில் தாயுடன் நீண்ட நேரம் வாக்குவாதம்.. விசாரணையில் திடுக்!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முரண்பட்ட தகவல்
பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் 5வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அதில் அவர் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
பதிவு திருமணம்
சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
போனில் வாக்குவாதம்
தற்கொலை செய்த அன்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நள்ளிரவில் வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிய பிறகு குளித்துவிட்டு உடைகளை மாற்றியுள்ளார். அப்போது அவர் தனது தாயாருடன் செல்போனில் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மன உளைச்சல்
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஹேம்நாத் அவர் தந்தை, சித்ரா படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இந்நிலையில் பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யா இன்று விசாரணையை தொடங்குகிறார். ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மறைந்த நடிகை சித்ரா, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர். அதில் முல்லை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே அந்த கேரக்டர் வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரேத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் தங்கி இருந்தார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்