Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ தென்னாப்பிரிக்காவில் இசை நிகழ்ச்சி - சித்ரா, மனோ பங்கேற்பு!
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் லோகு இன்னிசை கீதம் வழங்கப்போகும் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக.
எதிர்வரும் ஜுன் 1 ந் தேதி தென்னாப்பிரிக்காவில் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சுமார் இருபதாயிரம் தமிழர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் செரண்டிபிட்டி குழுவினர் இதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.
2001 ல் துவங்கப்பட்டு இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள்.
பாடகி சின்னக்குயில் சித்ரா, எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி புகழ் சுசித்ரா, பாடகர் மனோ, அடடா மழைடா அடை மழைடா புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்களும் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்கள்.