Don't Miss!
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கத்தான் ரஜினி மருத்துவமனையில் உள்ளார்' - சோ
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.
அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.
ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.
ரஜினிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது பிரச்சினைகள் இங்கேயே சரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்தார்.