'நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கத்தான் ரஜினி மருத்துவமனையில் உள்ளார்' - சோ

By Shankar

Cho S Ramaswamy and Rajinikanth
சென்னை: ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல சுறுசுறுப்பாக இருக்கிறார். என்னைப்போன்ற நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கவே அவர் இங்கே உள்ளார், என்றார்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.

அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.

ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.

ரஜினிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது பிரச்சினைகள் இங்கேயே சரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X