Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'வெட்டி கொல்வேன்': விஜயசாந்தி ஆவேசம்-கைதாகிறார்?
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிகளுக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக் கட்சியின் முக்கியத் தலைவரான விஜயசாந்தி,
இடைத் தேர்தலில் நமது கட்சி தான் எல்லா தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தனி தெலுங்கானா மாநிலம் அமையும் வரை நான் ஓய மாட்டேன். தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டுவேன். நான் தெலுங்கானாவைச் சேர்ந்தவள். யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார்.
விஜயசாந்தியின் இந்த பேச்சு தெலுங்கு தனியார் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.
இதையடுத்து மாநில தேர்தல் அதிகாரியான சுப்பா ராவ், நடிகை விஜயசாந்தி மீது பொது மக்களை கலவரம் செய்ய தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து பஞ்சரா ஹில்ஸ் போலீஸார் விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தேர்தல் கமிஷன் விஜயசாந்திக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் விஜய்சாந்தியை கைது செய்ய ஆந்திர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரது வீட்டருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.