Don't Miss!
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
வனிதாவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: ராபர்ட்
சென்னை: தனக்கும் வனிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடன இயக்குனர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் சமீபத்தில் பங்களாவை வாடகைக்கு விட்ட பிரச்சனை பூதாகரமானது. ஆலப்பாக்கத்தில் உள்ள பங்களாவை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு எடுத்த வனிதா அங்கேயே தங்கிவிட்டதாக விஜயகுமார் போலீசில் புகாரளிக்க, அந்த வீட்டில் தனக்கும் உரிமை இருக்கிறது என வனிதா ஆவேசமடைந்தார். அந்த பிரச்சனைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்பட்டது.
இந்தநிலையில், இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்துகொண்ட வனிதா, தற்போது நடன இயக்குனரும், நடிகருமான ராபர்ட்டுடன் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை மறுத்துள்ள நடன இயக்குனர் ராபர்ட், எனக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். நான் என்னுடைய மனைவி கிருஷ்ணபிரியா மற்றும் மகள் அர்ஷிதாவுடன் வசித்து வருகிறேன். இந்த செய்தியால் நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த மனவேதனை அடைந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார் வனிதா. இரண்டுமுறை விவாகரத்து ஆனபிறகு அவருடைய தாயார் மஞ்சுளா தான் வனிதாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். மஞ்சுளாவின் மறைவுக்கு பிறகு வனிதா மன உளைச்சலுடன் தனிமைத் தீயில் வாடுவதாக சொல்லப்படுகிறது.