கிறித்துவர்களை புண்படுத்தினேனா - சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து விளக்கம்

இந்தப் படத்தில், 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று வைரமுத்து எழுதியிருப்பதுதான் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. இதனால் கிறித்துவ அமைப்பினர் சிலர் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் வைரமுத்து வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, யாருடைய மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அந்த பாடல் எழுதப்பட்டது. அந்த வரிகள் கதாபாத்திரத்தின் குரல். கிறித்துவ மதத்தை மேம்படுத்தும் விதமாய் அந்த வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேனேயொழிய கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார்.
கவிஞருக்கு எழுதுறது வார்த்தையா கிடைக்கலை?
Comments


Click it and Unblock the Notifications