Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாங்களும் மரம் நட்டோம்... லாக்டவுனில் அசத்திய திரை பிரபலங்கள்
சென்னை : கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
லாக்டவுனில் வீட்டில் ஓய்வில் இருக்கும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலவிதங்களில் பொழுதை செலவிட்டு வருகின்றனர். நடிகைகள் சிலர் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் ஒர்க்அவுட் செய்து உடல் அழகை பராமரித்து வருகின்றனர். நடிகைகள் சிலர் சமையல், தோட்ட பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுவது, குடும்பத்தினருடன் செலவிடுவது என பொழுதை கழித்து வருகின்றனர்.
நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்கள் பலரும் தோட்ட பராமரிப்பு, குடும்பத்துடன் செலவிடுவது என பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நேற்று மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
விஜய், சூர்யா, அல்லு அர்ஜுன், துல்கர் சல்மான், ரகுல் பரீத் சிங், ஸ்ரத்தா கபூர், நாகர்ஜுனா, கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபு, பிரபாஸ், கேத்ரின் தெரசா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா சர்மா, ராம் சரண் உள்ளிட்டோர் தங்களின் வீட்டு தோட்டம் மற்றும் வீட்டின் அருகில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.