Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி
தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும்.
கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா.
அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம்.
இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார்.
விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!