Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உதவி இயக்குநர், கேமராமேன் குளத்தில் மூழ்கி பலி: ஆந்திராவுக்குப் போன இடத்தில் சோகம்!
சென்னை: ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற தமிழ் சினிமா இயக்குநர், கேமராமேன் ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனேவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. நீர்வீழ்ச்சி, இயற்கை எழிலுடன் உள்ள இந்த வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சினிமா குழுவினர் படப்பிடிப்பு நடத்துவார்கள்.
சென்னையைச் சேர்ந்த சினிமா குழு நண்பர்கள் 6 பேர் சதாசிவ கோனேவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் போரூரைச் சேர்ந்த காமிராமேன் பிரேம், உதவி இயக்குனர் விக்னேஷ் (24), தீபன், மதன், நவீன், சுகுமார் ஆகியோருடன் சதாசிவ கேனேவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள விடுதியில் அறை எடுத்து 2 நாள் தங்கினார்கள்.
திங்கட்கிழமையன்று அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். வழியில் உள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். இதில் நீச்சல் தெரியாத பிரேம், விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வடமாலைபேட்டை காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய பிரேம், விக்னேஷ் இருவரின் சடலத்தை மீட்டனர். அவர்களின் உடல் உடனடியாக புத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா உதவி இயக்குநரும், கேமராமேனும் உயிரிழந்த சம்பவம், திரைப்பட துறை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.