Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உதவி இயக்குநர், கேமராமேன் குளத்தில் மூழ்கி பலி: ஆந்திராவுக்குப் போன இடத்தில் சோகம்!
சென்னை: ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற தமிழ் சினிமா இயக்குநர், கேமராமேன் ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனேவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. நீர்வீழ்ச்சி, இயற்கை எழிலுடன் உள்ள இந்த வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சினிமா குழுவினர் படப்பிடிப்பு நடத்துவார்கள்.
சென்னையைச் சேர்ந்த சினிமா குழு நண்பர்கள் 6 பேர் சதாசிவ கோனேவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் போரூரைச் சேர்ந்த காமிராமேன் பிரேம், உதவி இயக்குனர் விக்னேஷ் (24), தீபன், மதன், நவீன், சுகுமார் ஆகியோருடன் சதாசிவ கேனேவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள விடுதியில் அறை எடுத்து 2 நாள் தங்கினார்கள்.
திங்கட்கிழமையன்று அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். வழியில் உள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். இதில் நீச்சல் தெரியாத பிரேம், விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வடமாலைபேட்டை காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய பிரேம், விக்னேஷ் இருவரின் சடலத்தை மீட்டனர். அவர்களின் உடல் உடனடியாக புத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா உதவி இயக்குநரும், கேமராமேனும் உயிரிழந்த சம்பவம், திரைப்பட துறை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.