Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!
Recommended Video
சென்னை: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக துரித விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
நீதி கிடைத்துவிட்டது.. வக்கிரபுத்தி உள்ளவர்களுக்கு ஒரு பாடம்.. என்கவுன்டர் குறித்து நடிகர் விவேக்!
உடல் எரிப்பு
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்று உடலை ஹைதராபாத்- பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் எரித்ததை ஒப்புக் கொண்டனர்.
என்கவுன்டர்
இந்நிலையில் இன்று காலை 3 மணிக்கு பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் போட்டுத்தள்ளினர். தெலுங்கானா போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
நீதி கிடைத்துள்ளது
இந்த என்கவுன்டர் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கிடைத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இறுதியாக நீதி
என்கவுன்டர் தொடர்பாக நடிகர் விஷால் பதிவிட்டுள்ள டிவிட்டில் இறுதியாக நீதி கிடைத்துவிட்டது.. தெலுங்கானா போலீசாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்திருக்கிறார்.
|
சிறு அமைதி
இதேபோல் படத் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில் அவரது குடும்பத்திற்கு இந்த சம்பவம் சிறு அமைதியை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.. நீதி கிடைத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
|
காலையிலேயே நல்ல செய்தி
தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்று காலை நல்ல செய்தியுடன் எழுந்திருக்கிறேன்.. நீதி கிடைத்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.
|
நல்ல செய்தி
இதேபோல் நடிகர் ஹரீஷ் கல்யாண் பதிவிட்டுள்ள டிவிட்டில் நல்ல செய்தி என குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட செய்தியை மேற்கோள் காட்டி டிவிட்டியிருக்கிறார்.
|
நடிகை ஹன்சிகா
இதேபோல் நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ள தனது பதிவில் நீதி கிடைத்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.
|
நன்றி போலீஸ்
நடிகை ரகுல் பிரீத்சிங் பதிவிட்டுள்ள டிவிட்டில் கற்பழிப்பு போன்ற ஒரு குற்றத்தைச் செய்தபின் நீங்கள் எவ்வளவு தூரம் ஓட முடியும்.. நன்றி தெலுங்கானா போலீஸ் என தெரிவித்திருக்கிறார்.