Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்...மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று டைரக்டர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராகி உள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜனவரி மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரானாவால் தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று(பிப்ரவரி 27) நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுபோடும் உறுப்பினர்களாக 1900பேர் உள்ளனர்.
இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1520 ஓட்டுகள் பதிவாகின. செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று மாலையே நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆர்.கே.செல்வமணி 389 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.