Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்
Recommended Video
சென்னை: சினிமாவில் பல வெற்றியை கொடுத்த மாபெரும் மனிதர்களின் பின்னால் கணபதி போன்ற உழைப்பாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஊடகம் எப்பொழுதும் திரைக்கு முன்னாள் இருக்கும் மனிதர்களை காட்டி விட்டு லட்சியவாதிகளை பதிவு செய்ய மறந்து விடுகிறது என்று இயக்குநரும் நடிகருமான அழகம் பெருமாள் கூறியுள்ளார். மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் புரடெக்சன் மேனேஜர் கணபதி ஒரு தனி அத்தியாயம் என்றும் தெரிவித்துள்ளார்
தளபதியில் துவங்கி மணிசாரின் பல படங்களில் தயாரிப்புத் துறையில் பணி புரிந்தவர் கணபதி. நான் உதவி இயக்குநராக இருந்த காலம் முதல் என்னோடு ஒரு நல்ல நெருங்கிய நண்பனாக இருந்தவர். பதினாறு நாட்களுக்கு முன்பு பக்கவாதம் (massive stroke) வந்து அப்படியே வீழ்ந்தவர் தான் கோமாவிலேயே படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழந்து விட்டார்.
இது குறித்து முகநூல் பக்கத்தில் அழகம் பெருமாள் எழுதியுள்ளார். அவரது சோகமயமான பதிவு:
நேற்று தான் எனக்கு தகவல் தந்தார்கள். உடன் சென்று பார்த்தேன். மருத்துவமனையிலிருந்து வீடு வந்தது முதல் இந்நேரம் வரை முகநூலில் (நேரில் முகம் காணா) நண்பர்களோடு எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கே தெரிகிறது. நான் நீண்ட நேரமாக இங்கே இருக்கிறேன் என் துயரை மறக்கத்தான். ஐசியு (ICU)ல் இருந்த அவரிடம் என்னை அழைத்துச் சென்ற அவரது மகன். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் வழக்கமாக நிலவும் மயான அமைதியைக் குலைத்து கத்திச்சொல்கிறான்.
சத்தமில்லாமல் கொளுத்திப்போட்ட சாண்டி.. பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. ருத்ரதாண்டவமாடும் வனிதா..!
அப்பா கண்ண தொற... பெருமாள் சார் வந்திருக்காரு... அழகம்பெருமாள், பொன்னியின் செல்வன்ல நீ வொர்க் பண்ணனுமாம், உன்ன கூட்டிட்டு போக வந்திருக்காரு.
சினிமாவில் பல வெற்றியை கொடுத்த மாபெரும் மனிதர்கள் பின்னால் மிகப் பெரிய உழைப்பாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஊடகம் எப்பொழுதும் திரைக்கு முன்னாள் இருக்கும் மனிதர்களை காட்டி விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட சினிமா, லட்சியவாதிகளை பதிவு செய்ய மறந்து விடுகிறது.
ஒரு திறமையான புரொடக்சன் மேனேஜர் மீண்டு வரவேண்டும். இந்த விநாயகர் சதுர்த்தி, கணபதியை காப்பாற்ற வேண்டும்.
இப்படிக்கு - அழகம் பெருமாள்
(இயக்குனர் / நடிகர்) கணபதி போன்ற சினிமா காதலர்களின் நண்பன்.
இந்தப் பதிவை பலர் பார்த்து பிராத்தனை செய்து கொண்டார்கள். ஆனால் கடவுள் கணபதியை அவரிடமே எடுத்து கொண்டார். மணி சார் படங்களில் வேலை செய்த பல நடிகர்கள், இவர் உழைப்பையும், இழப்பையும் நன்கு அறிவார்கள். மணி சார் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம்.
நம்பர் 8, ராமகிருஷ்ணபுரம் 2ஆவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33 என்பது அவரது வீட்டு முகவரி. ஆனால் அவர் இந்த நாளில் அங்கு இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று சென்றதால் இனி கடவுள் பார்த்து கொள்வார் அந்த குடும்பத்தை, என்று இல்லாமல் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் கணபதி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும் அழகம் பெருமாள் கூறியுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?