Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு தொல்லை..கானா பாடகர் கைது!
சென்னை : ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சினிமா கானா பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிற்கு ஒரு முறை பெண்களை நினைத்துப் பார்க்கவும், அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவும், பெண்கள் தினத்தை உருவாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்மங்களும் குறைந்து விட்டதா என்றால் இல்லை என்பதே பதில். காலம் மாறிவிட்டது நாகரிகம் வளர்ச்சி பெற்று விட்டது என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தில் தான் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய செய்தி.
மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்றார் கவிமணி. அந்தளவிற்கு பெண்மை போற்றப்பட்டாள், பாதுகாக்கப்பட்டாள். இந்த உலகத்தின் ஆணிவேராக அடையாளம் காட்டப்பட்டாள். ஆனால் தற்போதைய நிகழ்வுகள் பெண்மையின் மீதான பாதுகாப்பையும், பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தளபதி 67 ல் இணைந்த ஆக்ஷன் ஹீரோ...6 வில்லன்களில் இவரும் ஒருவரா?
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எது சுதந்திரம்? அந்நியரிடம் இருந்து நாட்டைத்தான் மீட்டிருக்கிறோம். ஆனால் ஆணாதிக்கத்தில் இருந்து பெண்களை மீட்டு விட்டோமா என்றால், இல்லை என்பதற்கு ஓராயிரம் வன்மங்கள் சாட்சியாக இருக்கிறது.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த 2 வாலிபர்கள் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கானா பாடகர்களான வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகன் என்கிற டோலாக் ஜெகன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் ஜெகன் சினிமாவில் பாடல் பாடி உள்ளார்.