Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா நிருபர்- பிஆர்ஓ நெல்லை அழகேஷ் மரணம்!
சென்னை: சினிமா நிருபரும் பிஆர்ஓவுமான நெல்லை அழகேஷ் மாரடைப்பு காரணமாக தன் அறையில் மரணமடைந்தார்.
தினமணி, பொம்மை, ஆனந்த சினிமா உள்பட பத்திரிகைகளில் பணியாற்றியவர் நெல்லை அழகேஷ். திருநெல்வேலி அருகே பேட்டையைச் சேர்ந்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனந்த சினிமா மாத இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஏழு வருடங்களாக கலைமாமணி அஜீத் மாத இதழிலும் பணிபுரிந்து வந்தார்.
இவன் யாரோ, மண், ஆட்டம், அச்சச்சோ, பிறப்பு, வேள்வி, வசூல், துணிச்சல், கடற்கரை, மின்சாரம், உனக்கே உயிரானேன், திருமண அழைப்பிதழ், இரா, மகான் கணக்கு, சேவற்கொடி, யமுனா போன்ற படங்களில் திரைப்பட மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளார்.
தற்போது ஆர்.ஷங்கரின் தாண்டவம், ஊராட்சி ஒன்றியம், கரிசல் பாட்டியும் காந்தி நகரும் ஆகிய படங்களில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார்.
திரைப்படம் இயக்கும் எண்ணத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்தவர் நெல்லை அழகேஷ். இவரது பெயர் அழகிய நம்பி. இதே பெயரில் வானொலியில் ஒருவர் புகழில் இருந்ததால், தனது பெயரை நெல்லை அழகேஷ் என்று மாறி வைத்துக்கொண்டார்.
அழகேஷின் தாயார் இசக்கி அம்மாள். சாந்தி, கோமதி என இரு சகோதரிகளும், பாலசுப்பிரமணியன் என்கிற ஒரு சகோதரரும் உள்ளனர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சினிமா பிரஸ் மீட்டுக்கு போய் வந்தவர், இரவு தன் அறையில் படுக்கையில் படுத்தபடி டிவி பார்த்திருக்கிறார். திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அடுத்த நாள் இரவு வரை அவர் இறந்து கிடந்ததே யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களாக அறை பூட்டிக் கிடந்ததால் சந்தேகப்பட்ட நண்பர்கள் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தர, அவர் போலீசில் புகார் தெரிவித்தார். கதவை உடைத்துப் பார்த்தபோது நெல்லை அழகேஷ் பிணமாகக் கிடந்தார்.
அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊருக்கு அரசு இலவச அமரர் ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டது. சினிமா பத்திரிகையாளர்களும் பிஆர்ஓக்களும் பெரும்பான்மையாகத் திரண்டு வந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அவரது இறுதிச் செலவு மற்றும் குடும்பத்தினர் செலவுக்காக தங்களால் முடிந்த அளவு நிதி திரட்டி ரூ 63 ஆயிரத்தை, அழகேஷின் அண்ணனிடம் ஒப்படைத்தனர்.
இன்று பிற்பகல் திருநெல்வேலி பேட்டையில் அழகேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.