ஆண்டவனுக்கே அடுக்குமா.. இதில் கூடவா விளம்பரம்.. நயன்தாராவை வெளுத்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: காசு, பணம்,துட்டுனு எதுக்கு இப்படி அலையுறீங்க என்று பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை வெச்சி செய்துள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாராக கொடுத்த நிவாரண பொருளை விளம்பரத்திற்காக பயன்படுத்தியால், நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
பயில்வான் ரங்கநாதன்: இது குறித்து, பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசி உள்ளார். அதில், நடிகை நயன்தாரா கேரளாவில் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பிறகு ஐயா படத்தில் இயக்குனர் ஹரி சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆனார். அதன் பின், அவரது வளர்ச்சி மலையை தொட்டது.
பிரிந்தனர்: பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர், வல்லவன் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்த போது சிம்புவை காதலித்தார். இவர்களின் காதல் கல்யாணம் வரை சென்றது. பின் என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர்.
மார்க்கெட் குறையல: அதன் பிறகும், பிரபுதேவாவை காதலித்து சேர்ந்து வாழ்ந்த நிலையில், அந்த உறவும் முறிந்து போனது. இப்படி அடுத்தடுத்து இவர் காதலில் விழுந்த போதும், நயன்தாராவிற்கு பட வாய்ப்பு குறையவே இல்லை. இதைப்பயன்படுத்தி தனது சம்பளத்தை நயன்தாரா கணிசமாக உயர்த்திக்கொண்டே வந்தார்.
பணம் தான் குறிக்கோள்: நயன்தாரா அண்மையில் இந்தி படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட்டடித்ததால், தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு படவாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. இப்படி நயன்தாராவிற்கு தெரிந்தது எல்லாம் காசு.. பணம் .. துட்டு... மணி மணி தான். அவரது திருமணத்தையே ஓடிடி தளத்திற்கு விற்கு காசு பார்த்தவர் தான் நயன்தாரா.
இதில் விளம்பரமா: நயன்தாரா தற்போது, மிக்ஜாம் புயலில் , பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை கொடுத்தார். நல்ல விஷயம்தான், பாராட்டலாம். ஆனால் அதில் நயன்தாரா புகைப்படத்தோடு அவர் நடத்தும் பிசினஸ் பொருட்களின் விளம்பரமும் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த பொருட்களை வாங்கியவர்களிடம் இந்த பொருள் எப்படி இருக்கு என்று சொல்ல சொல்லி இருக்கிறார்.
ஆண்டவனுக்கே அடுக்குமா: இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்குமா, இப்படி செய்யலாமா, உனக்கே ஆண்டவன் குழந்தையை கொடுக்கல இரண்டு குழந்தைகளை தத்து எடுத்துவளர்ந்து வர இது தேவையா. இந்த விளம்பர வீடியோவை பார்த்த அனைவருமே நயன்தாராவை திட்டி தீர்து காரி மூச்சில் துப்பி வருகின்றனர் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











