S J சூர்யாவுக்கு மனநோயா? உண்மையை உளறிய விஷால்.. கண்டுபிடித்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: எஸ் ஜே சூர்யாவுக்கு மனநோய் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மனநோய்: நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில்,மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா என்னைவிட சிறப்பாக நடித்து இருக்கிறார். அந்த படத்தில் உண்மையான ஹீரோ அவர்தான். எஸ்ஜே சூர்யாவிற்கு ஒரு மனப்பிரச்சனை உள்ளது. இதை விஷால் எப்படி கண்டுபிடித்தார் என்பதை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மனநோய்: நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில்,மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா என்னைவிட சிறப்பாக நடித்து இருக்கிறார். அந்த படத்தில் உண்மையான ஹீரோ அவர்தான். ஆனால், எஸ்ஜே சூர்யா தான் உண்மையான ஹீரோ, எஸ்ஜே சூர்யாவிற்கு ஒரு மனப்பிரச்சனை உள்ளது. இதை விஷால் எப்படி கண்டுபிடித்தார் என்பதை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அந்த பிரச்சனை: எஸ்ஜே சூர்யா அவரது உதவியாளரிடம் தண்ணீர் கேட்டார். உதவியாளர் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தார். ஆனால், தண்ணீரை குடிக்காமல் டம்ளரை கழுவுனியா.... கழுவுனியானு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார் எஸ்.ஜே சூர்யா. அதன்பின் உதவியாளர் தண்ணீர் கொண்டு வந்து, டம்ளரை அவரின் கண் எதிரே கழுவிய பிறகுதான் எஸ்ஜே சூர்யா தண்ணீரையே குடித்தார் என்று கூறியிருந்தார்.

ஓசிடி: இதற்கு பெயர் தான் ஓசிடி என்கிற மன பிறழ்வு நோய், அவர் சாதாரணமாக இருக்கும் போது, நன்றாக பேசுவார். ஆனால், திடீரென்று பயங்கர கோபமாக திட்டுவார், கத்துவார் எதுக்கு கோபப்படுகிறார் ஏன் கோபப்படுகிறார் என்பது யாருக்குமே தெரியாது. இந்த உண்மையான கேரக்டரில் தான் எஸ்ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் நடித்து இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











