Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மீடியாவை அவமதிக்கும் சினிமா... ட்விட்டர் தரும் தைரியமா?
முன்பெல்லாம் பத்திரிகைக்காரர் என்றாலே ஒரு ஜோல்னாப்பையோடும், குர்தாவோடும்தான் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்திரிகையாளர்கள் என்றாலே நேர்மையான பத்திரிகையாளர்கள் மட்டும்தான். எம்ஜிஆர் முதல் பாக்யராஜ் வரை பத்திரிகையாளராக நடித்து பத்திரிகைத் தொழிலை கவுரவப்படுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கும் சினிமாக்காரர்களுக்கு பத்திரிகையாளர்கள் என்றாலே இளக்காரமாக தெரிகிறது.
கம்பீரம் படத்தில் ஒரு காட்சியில் பத்திரிகையாளர்கள் கவர் வாங்குவது போல் காண்பித்து பின்னர் அதனை மாற்றிக் காட்டி, பத்திரிகையாளர்களின் நேர்மையைச் சித்தரித்திருப்பார்கள். ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து மீடியாக்கார்ர்களை கவர் வாங்குபவர்களாக மட்டுமே சித்தரிக்கிறது சினிமா.
விசாரணை படத்தில் கவர் கொடுத்தால் போலி என்கவுண்டரை மறைத்து விடலாம் என்பதுபோல் வசனம் வரும். முத்துன கத்திரிகாய் படத்தில் கவருக்காக பத்திரிகையாளர் அலைவது போல் வசனம் வரும்.
கடந்த வாரம் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் கார்... என்று ஹீரோ ஆரம்பித்த உடனேயே அருகில் இருக்கும் பத்திரிகையாளர் கவரா எங்கே என்று ஆர்வத்துடன் கேட்பார். பத்திரிகையாளர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அது. இருந்தாலும் கூட இதே விசாரணையையும், ஆண்டவன் கட்டளையையும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவது அதே பத்திரிகைகள்தான்.
முத்துனா கத்திரிகாய் என்ற 'முன்னாள் காதலியின் மகளை காதலித்து கரம் பிடிக்கும்' அற்புதமான சித்திரத்தில் கவருக்காக பத்திரிகையாளர்கள் அலையோ அலை என்று அலைவதாக காட்டியிருப்பார்கள்.
கவர் வாங்காத பத்திரிகையாளரே இல்லை என்பதுபோல் காண்பிக்கப்படுவது நேர்மையான பத்திரிகையாளர்களையும் சேர்த்தே அசிங்கப்படுத்தும் செயல். வெற்றிமாறன், மணிகண்டன், சுந்தர்.சி மூவருமே தங்கள் வாழ்க்கையில் நேர்மையான பத்திரிகையாளரையே பார்த்ததில்லை என்று ஒப்புக்கொள்வார்களா?
யாருமே கவர் வாங்கவில்லை என்று சொல்லவில்லை. என்னவோ மீடியா என்றாலே கவர்தான் என்ற ரீதியில் பரப்பப்படுவது ஏன்? ஒருவேளை இந்த இயக்குநர்கள் எல்லாம் இப்படி கவர் கொடுத்துதான் வளர்ந்தார்களா?
இன்னொரு பக்கம் பேட்டிகள் கொடுப்பது, புரமோஷன்களுக்கு வருவது ஆகியவற்றைக் குறைத்துவிட்டு எல்லாவற்றையும் ட்விட்டரில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மிதப்புக்கு வந்துவிட்டார்கள் சினிமாக்காரர்கள். ட்விட்டரை ஃபாலோ பண்ணி செய்தி அடிக்கும் பத்திரிகையாளர்களும் இதற்கு ஒரு காரணம்.
ட்விட்டர் என்பது ஒரு தொழில்நுட்பம். இன்னொரு தொழில்நுட்பம் வந்தால் அது காணாமல் போய்விடும் இதனை சினிமாக்கார்ர்கள் உணர வேண்டும்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்