Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா உலக தாதாக்கள்
அஜீத்தை பாலா அன்ட் கோ மிரட்டியது தொடர்பாக ராஜன் கூறுகையில்,
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட சங்கத்தை அணுகிதான் தீர்வு காணவேண்டும். அந்த நிலை இப்போது இல்லை. பிரச்சினைக்குத் தீர்வு காண தாதாக்களைநாடுகின்றனர். அல்லது தாதாக்களாக அவர்களே மாறி விடுகிறார்கள்.
அஜீத் விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. இயக்குனர் ஒருவருக்கும்,தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது அந்தத்தயாரிப்பாளரைக் கடதிக் கொண்டு போனவராக கூறப்பட்டவர்தான் இப்போதையபிரச்சினையிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் அவர் தாதாக்களின்உதவியை நாடியுள்ளார்.
சரி அஜீத் புகார் செய்யவில்லை. இருந்தாலும் இந்த விஷயத்தில் நடிகர் சங்கமேதலையிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இது எதைக் காட்டுகிறதுஎன்றால், சங்கங்கள் அனைத்தும் வெறும் அலுவலகங்களாகவே இருக்கிறதுஎன்பதுதான் உண்மை.
அதிலும் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 6 மாதமாக செத்துக் கிடக்கிறது.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்.
இப்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பட்டுக் கிடப்பதால், கூத்தாடிகளாகதாதாக்கள் புகுந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வந்து விட்டார்கள்.
தமிழ் சினிமா தாதாக்களின் கைக்குப் போய் விடாமல் விழித்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் சினிமாவை அவர்கள் கையில் கொடுத்து விட்டு நாம் விழி பிதுங்கிநிற்க வேண்டும்.
எனவே தாதாக்களை ஒடுக்க அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம்நடத்த தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் முயற்சியில் இறங்கியுள்ளது.அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேவைப்படடால் தெருவில் இறங்கிப் போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார் ராஜன்.