சுகாசினி என்ன ஒளவையா?: வழக்குகள் பாய்கின்றன சென்னை:குஷ்புவும் சுகாசினியும் பொது மேடையில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்களது வீட்டின முன் துடைப்பம் ஏந்தி போராட்டம்நடத்துவோம் என்று தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் மற்றும் தமிழக மக்கள் இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் எச்சரித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை,தமிழ்ப் பெண்களின் கற்பை களங்கப்படுத்திய நடிகை குஷ்பு, நடிகர் சங்கத்தில் மன்னிப்பு கேட்டால் அவரை தமிழ் மக்கள் மன்னித்துவிடுவார்கள்.இந்த நிலையில் குஷ்புவிடம் போய் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்க சுகாசினி என்ன ஒளவை பிராட்டியா?.இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம் பெண்களுக்கும் சேர்த்துத் தான். ஆனால், யாருமே நாவடக்கமின்றி, வாய்க் கொழுப்பாக பேச சுதந்திரம் கொடுக்கப்படவில்லை சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்பதைசுகாசினிக்கு சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.ஒரு மனநோயாளியை போன்று ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானப்படுத்திய குஷ்புவும் சுகாசினியும் பொது மேடையில்மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது இயக்கம் அவர்களது வீட்டின முன் துடைப்பம் ஏந்தி போராட்டம் நடத்தும் என்றுகூறியுள்ளார் ராஜன்.சுஹாசினி மீதும் வழக்குகள்:இதற்கிடையே குஷ்புவைப் போலவே தமிழர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி சுகாசினி மீதும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.கரூர் நீதிமன்றங்களில் பாமக மகளிர் அணியின் சார்பில் வழக்கறிஞர் டானியாவும், தலித் விடுதலை இயக்கத்தின் சார்பிலும் 2 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.
சென்னை:
குஷ்புவும் சுகாசினியும் பொது மேடையில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்களது வீட்டின முன் துடைப்பம் ஏந்தி போராட்டம்நடத்துவோம் என்று தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் மற்றும் தமிழக மக்கள் இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை,
தமிழ்ப் பெண்களின் கற்பை களங்கப்படுத்திய நடிகை குஷ்பு, நடிகர் சங்கத்தில் மன்னிப்பு கேட்டால் அவரை தமிழ் மக்கள் மன்னித்துவிடுவார்கள்.
இந்த நிலையில் குஷ்புவிடம் போய் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்க சுகாசினி என்ன ஒளவை பிராட்டியா?.இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம் பெண்களுக்கும் சேர்த்துத் தான்.
ஆனால், யாருமே நாவடக்கமின்றி, வாய்க் கொழுப்பாக பேச சுதந்திரம் கொடுக்கப்படவில்லை சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்பதைசுகாசினிக்கு சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஒரு மனநோயாளியை போன்று ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானப்படுத்திய குஷ்புவும் சுகாசினியும் பொது மேடையில்மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது இயக்கம் அவர்களது வீட்டின முன் துடைப்பம் ஏந்தி போராட்டம் நடத்தும் என்றுகூறியுள்ளார் ராஜன்.
சுஹாசினி மீதும் வழக்குகள்:
இதற்கிடையே குஷ்புவைப் போலவே தமிழர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி சுகாசினி மீதும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கரூர் நீதிமன்றங்களில் பாமக மகளிர் அணியின் சார்பில் வழக்கறிஞர் டானியாவும், தலித் விடுதலை இயக்கத்தின் சார்பிலும் 2 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications