Don't Miss!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனக்கென தனி முத்திரை பதித்த டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் இரங்கல்!
சென்னை: பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபுவின் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் டைப்பிஸ்ட் கோபு. சென்னை ராயப்பேட்டையில் மனைவி மற்றும் இரண்டாவது மகனுடன் வசித்து வந்த அவருக்கு நேற்று திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
நடிகர் கோபுவின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
கமல் - விவேக் ரசிகர்களிடையே மீண்டும் சண்டை... இவங்க பிரச்சினை ஓயவே ஓயாதா?
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்த கோபு, கே.பாலசந்தரின் நாணல் படம் மூலம் அறிமுகமாகி, இதுவரை 600க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றவர். இவர் மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.
டைப்பிஸ்ட் கோபு நாடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர். மேலும், இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு தமிழ் திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
டைப்பிஸ்ட் கோபுவை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்", என முதலமைச்சர் கூறியுள்ளார்.
நடிகர் டைப்பிஸ்ட் கோபுவின் மறைவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.