முதலமைச்சர் விஜய் செம ஜாலி.. பிரக்ஞானந்தவுடன் செஸ் ஆட்டம்.. என்ன ரிசல்ட் தெரியுமா?

சென்னை: முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். அவரது ஆட்சியில் வரும் அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் என்று எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தாலும்; தொடர்ந்து செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நார்வே செஸ் தொடரில் வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் இன்று செஸ் விளையாடினார் விஜய்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை அவர் நிரூபித்தாலும்; மொத்தம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மிளிர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தும் முத்திரை பதித்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

CM Vijay Plays Chess With Grandmaster Praggnanandhaa Video Goes Viral
Photo Credit:

விமர்சனங்கள் கடுமை: ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. ஏகப்பட்ட அறிவிப்புகள் வந்தாலும்; ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் தவெகவின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல் சோஷியல் மீடியா பலத்தோடு ஆட்சிக்கு வந்த விஜய்; அதே பலத்தால்தான் ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக மீது அவதூறு பரப்புகிறார் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

Also Read
நடிகை சுகன்யாவுக்கு விஐபியுடன் நெருக்கம்?.. பற்ற வைத்த வீரப்பன்.. 10 லட்சம் நஷ்ட ஈடு பெற்ற நடிகை
நடிகை சுகன்யாவுக்கு விஐபியுடன் நெருக்கம்?.. பற்ற வைத்த வீரப்பன்.. 10 லட்சம் நஷ்ட ஈடு பெற்ற நடிகை

பிரக்ஞானந்தாவுடன் சந்திப்பு: அதேசமயம் குரங்கணி பகுதிக்கு பேருந்து விட்டது உள்ளிட்ட விஷயங்களில் ஸ்கோரும் செய்திருக்கிறார். இந்நிலையில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வேயில் நடந்த செஸ் தொடரை வென்று அசத்தியிருக்கிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். மேலும் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என வரலாற்று சிறப்பையும் அவர் பெற்ற்றிருக்கிறார். அவர் இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார்.

செஸ் விளையாடிய விஜய்: அப்போது விஜய்யும், பிரக்ஞானந்தாவும் செஸ் விளையாடினார்கள். அப்போது விஜய் தன்னால் முடிந்த அளவுக்கு மூவ்களை வைத்து கிராண்ட் மாஸ்டருக்கு டஃப் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் பிரக்ஞானந்தாவோ சில மூவ்களிலேயே விஜய்க்கு செக் மேட் வைத்துவிட்டார். பிறகு கைதட்டி சிரித்து மகிழ்ந்தார் விஜய். இதன்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பிரக்ஞானந்தாவின் தாய், தந்தையும் உடனிருந்தார்கள். அவருக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்த வீடியோவையும் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ட்ரெண்டாக்கிவருகிறார்கள். இத்தனை கால வரலாற்றில் எந்த முதலமைச்சரும்; வெற்றி பெற்றவர்களுடன் இவ்வளவு க்யூட்டாக விளையாண்டதில்லை; விஜய் ஒவ்வொரு கட்டத்திலும் தனது முத்திரையை பதிக்கிறார் என்றும் புகழாரம் சூட்டிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X