Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட்: கோவை கல்லூரி எச்சரிக்கை
Recommended Video
கோவை: ப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று கோவையில் உள்ள கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்துள்ளது.
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் நடிகை ப்ரியா வாரியர் பள்ளி வகுப்பில் அமர்ந்து கொண்டு சக மாணவனை பார்த்து கண்ணடித்த காட்சி மிகவும் பிரபலமானது.
வகுப்பில் அத்தனை மாணவ, மாணவியர் இருக்க ப்ரியா சக மாணவன் ஒருவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த காட்சியும் பிரபலமானது. அதில் இருந்து பல மாணவிகள் ப்ரியா போன்று கண்ணடிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாணவிகள் ப்ரியா வாரியர் போன்று கண்ணடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. யாராவது ப்ரியா வாரியர் மாதிரி கண்ணடித்தால் கல்லூரியில் இருந்து ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.