Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெஞ்சு பொறுக்குதில்லையே: ட்விட்டரில் கொந்தளிக்கும் விக்னேஷ் சிவன்
சென்னை: கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கொடூர செய்தி அறிந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வேதனை அடைந்துள்ளார்.
கோவையில் காணாமல் போன 6 வயது சிறுமி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்த செய்தியை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபமாக ட்வீட் செய்துள்ளார்.
இடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி
|
விக்னேஷ் சிவன்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
இது போன்ற விஷயங்களில் விரைந்து தண்டனை அளிக்க வேண்டும். தினமும் பெண்களுக்கு எதிராக ஏதாவது கொடுமை நடக்கிறது. ட்வீட் செய்வதை விட்டுவிட்டு ஏதாவது பயனுள்ளதாக செய்ய வேண்டும் என்கிறார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா
நயன்தாராவை ராதாரவி அசிங்கமாக பேசியபோது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரிடம் புகார் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். மேலும் ராதாரவியை விளாசி பல ட்வீட்டுகள் போட்டார் அவர்.
பாராட்டு
காதலிக்கு ஒன்று என்றால் விக்னேஷ் சிவன் துடித்துப் போகிறாரே என்று சிலர் அவரை பாராட்டினார்கள். சிலரோ எத்தனையோ நடிகைகளை ராதாரவி கேவலப்படுத்தியபோது சும்மா இருந்த நீங்கள் உங்கள் காதலி என்றதும் பொங்குகிறீர்களா என்று கேட்டனர்.
ஆறுதல்
திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் அன்பான இயக்குநரே என்று ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.