Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கஷ்ட காலத்தில் தூங்கிய கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட நகைச்சுவை நடிகர்
Recommended Video
சென்னை: கஷ்டப்பட்ட போது தூங்கிய அதே கோவிலில் வைத்து தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் நகைச்சுவை நடிகர் முனிஸ்காந்த்.
சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் 2002ம் ஆண்டு சென்னை வந்தவர் ராமதாஸ். படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பல ஆண்டுகளாக ஜூனியர் ஆர்டிஸ்டாகவே இருந்தார்.
சினிமா
எதிர்பார்த்தபடி பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த ராமதாஸ் மலேசியா சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் சினிமா ஆசை விடாததால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டாராம்.
முனிஸ்காந்த்
முண்டாசுப்பட்டி படம் மூலம் தான் ராமதாஸின் நடிப்பு அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த படத்தில் அவர் முனிஸ்காந்தாக நடித்தார். அதில் இருந்து அவரை அனைவரும் முனிஸ்காந்த் என்றே அழைக்கிறார்கள்.
திருமணம்
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து தேன்மொழி என்ற பெண்ணை முனிஸ்காந்த் இன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
படுக்க இடம்
சினிமாவில் நடிக்க சென்னை வந்து கஷ்டப்பட்ட காலத்தில் முனிஸ்காந்த் வடபழனி கோவிலில் தான் தூங்கினாராம். தற்போது சினிமாவில் வளர்ந்த பிறகு அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.