Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஸ்டைல் , எனக்கு என் முடி தான் ஸ்டைல்
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு அதில் நிரந்தரமாக நீடித்துக் கொண்டு இருப்பது. மிகவும் கடினம் அப்படி நீண்ட நாள் காமெடியில் கலக்கியவர்களில் ஒருவர் தான் யோகி பாபு. தான் நடித்த முதல் திரைப்படமான யோகியில் நடித்த பிறகு அப்படத்தின் பெயரையே தன் பெயரில் இணைத்து யோகி பாபு என்று மாற்றி கொண்டார். முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொல்லு சபாவில் நடித்தார் யோகி பாபு.
அத்தொடரின் இயக்குநர் ராம் பாலா அவரை ஜீனியர் ஆடிஸ்டாக பின்னாளில் நடிக்க வைத்தார். யோகி படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ஓரு பிரேக் ஆக அமைந்தது பட்டத்துயானை திரைப்படம்.
மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பாபு.
இவரை எல்லோருக்கும் நன்கு அறிமுக படுத்திய திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த மான் காரத்தே, இதில் வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் அனைவரையும் கவர்ந்தார்.இதுவே இவருக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. மணிகண்டனின் காக்கா முட்டை படத்தில் இவர் பேசிய எனக்கே விபூதி அடிக்க பாத்தலே வசனம் இன்று வரை ரசிக்க வைக்கிறது.
இதன் பின் பல படங்களில் நடித்து காமெடியில் கலக்கி வந்தார் யோகி பாபு. தன்னால் காமெடி மட்டுமல்லாமல் யதார்த்தமான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று இவரை ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம்
பரியெறும் பெருமாள். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் யோகி பாபு.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவரிடம் உங்கள் தலையில் இவ்வளவு முடி வளர்கிறதே அதற்கு என்ன காரணம் என்று காமெடியாக கேட்ட போது அவர் அதற்கு ஒரு ரூபாய் சீயக்காய் தான் இவ்வளவு வளர காரணம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். மனதில் பட்டத்தை தைரியமாக , காமெடியாகவும் சொல்ல கூடிய திறமைசாலி தான் யோகி பாபு. மேலும் மேலும் யோகம் அடிக்கட்டும் யோகி பாபு வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்.