Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எந்தக் கடவுளும் என் மனைவிய காப்பாத்தலையே... கலங்கும் மதுரை முத்து
சென்னை: தனது மனைவி இறந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் காமெடி நடிகர் முத்து இனிமேல் தனது வாழ்வில் எந்த சாமியையும் கும்பிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்துவின் மனைவி இறந்து போனார். 2 குழந்தைகளுக்கு தாயான அவர் இறந்து போனது பலரது மனதிலும் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மனைவியை இழந்து 2 குழந்தைகளுடன் தவிக்கும் முத்து சாமி கும்பிடப் போய்தான் என் மனைவி இறந்து போனார். அதனால் இனிமேல் தான் சாமி கும்பிடப் போவதில்லை என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.
மதுரை முத்து
தனது நகைச்சுவையால் மற்றவர்களை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் இறந்து போனார். 2 குழந்தைகளின் தாயான அவர் இறந்து போனது தமிழ்த் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் மனங்களில் தீராத வருத்தத்தை ஏற்படுத்தியது.
பிள்ளையார்பட்டி
கடந்த பிப்ரவரி 3 ம் தேதி சாலை விபத்தில் இறந்து போன வையம்மாள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போதுதான் விபத்தை சந்தித்து இறந்திருக்கிறார். கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளிநாடு சென்றிருந்த முத்துவிற்கு அம்மை நோய் தாக்க, தனது கணவருக்கு அம்மை குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தான் முத்துவின் மனைவி கோயிலுக்கு சென்றாராம்.
பிப்ரவரி 15
வருகின்ற பிப்ரவரி 15 ம் தேதி இருவரின் திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு பிடித்த மாதிரி பல்வேறு ஏற்பாடுகளையும் மனைவிக்குத் தெரியாமல் முத்து செய்திருக்கிறார். அதே போல முத்துவிற்கு கார் ஒன்றை பரிசாக அளிக்கவும் அவரது மனைவி திட்டமிட்டு இருந்தாராம்.
கடவுளே வேண்டாம்
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "எந்த நேரமும் சாமியைக் கும்பிட்ட என் மனைவியை எந்தக் கடவுளும் வந்து காப்பாத்தவில்லை. அதனால இனிமே நானும் எந்தக் கடவுளையும் கும்பிடப் போறதில்லை. என்னோட வீட்டுல என் மனைவி வையம்மாளுக்கு கோயில் கட்டி இனிமே அவளை மட்டுமே கும்பிடப் போறேன்" என்று கூறியிருக்கிறார்.
கடவுள் நல்லவங்களத் தான் அதிகம் சோதிப்பாரு போல!
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!