Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நித்தியானந்தா சாமியாரை சந்தித்தார் காமெடி நடிகர் சந்தானம்
நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமான செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக வீடியோவில் சிக்கியவர் நித்தியானந்தா. பின்னர் நான் அவன் இல்லை என்ற ரீதியில் மறுத்தார். அதேபோல நடிகை ரஞ்சிதாவும் அதை மறுத்தார். ஆனால் அவர்கள் இருவரும்தான் அந்த படுக்கை அறையில், வீடியோ காட்சியில் உள்ளனர் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு கர்நாடக கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்தபோதிலும் அவரை இன்னும் நம்புவோர் இருக்கத்தான் செய்கின்றனர். டிவி நடிகை மாளவிகா தொடர்ந்து நித்தியானந்தாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். அவரது ஆசிரம நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நடிகை ரஞ்சிதாவும் இப்போது பகிரங்கமாகவே வெளியில் வர ஆரம்பித்து விட்டார்.
இந்தநிலையில், தமிழ் சிரிப்பு நடிகர் சந்தானம் நித்தியானந்தாவை சந்தித்துப் பேசி ஆசி பெற்றுள்ளார்.
சினிமாப் பட ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருந்தாராம் சந்தானம். அப்போது நித்தியானந்தாவை பார்க்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவரும், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சேர்ந்து போய் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
அடுத்த பட காமெடியில் நித்தியானந்தாவை வைத்து ஏதேனும் வசனம் பேசத் திட்டமா சந்தானம்?