Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நித்தியானந்தா சாமியாரை சந்தித்தார் காமெடி நடிகர் சந்தானம்
நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமான செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக வீடியோவில் சிக்கியவர் நித்தியானந்தா. பின்னர் நான் அவன் இல்லை என்ற ரீதியில் மறுத்தார். அதேபோல நடிகை ரஞ்சிதாவும் அதை மறுத்தார். ஆனால் அவர்கள் இருவரும்தான் அந்த படுக்கை அறையில், வீடியோ காட்சியில் உள்ளனர் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு கர்நாடக கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்தபோதிலும் அவரை இன்னும் நம்புவோர் இருக்கத்தான் செய்கின்றனர். டிவி நடிகை மாளவிகா தொடர்ந்து நித்தியானந்தாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். அவரது ஆசிரம நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நடிகை ரஞ்சிதாவும் இப்போது பகிரங்கமாகவே வெளியில் வர ஆரம்பித்து விட்டார்.
இந்தநிலையில், தமிழ் சிரிப்பு நடிகர் சந்தானம் நித்தியானந்தாவை சந்தித்துப் பேசி ஆசி பெற்றுள்ளார்.
சினிமாப் பட ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருந்தாராம் சந்தானம். அப்போது நித்தியானந்தாவை பார்க்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவரும், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சேர்ந்து போய் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
அடுத்த பட காமெடியில் நித்தியானந்தாவை வைத்து ஏதேனும் வசனம் பேசத் திட்டமா சந்தானம்?