Don't Miss!
- News அமெரிக்காவை உலுக்கிய பால்டிமோர் பாலம் விபத்து! மேலும் 2 பேர் சடலமாக மீட்பு! தேடுதல் பணி தீவிரம்
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Sports ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே அதுதான்.. கொதித்த ரசிகர்கள்
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஹீரோவாக நடிக்கும் செந்தில்.. புதிய படத்தின் டப்பிங்கை முடித்து அசத்தல்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடி நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் செந்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் முடிந்துள்ளன.
காதலியின் கைகளில் கடைசி மூச்சை விட்ட நடிகர் சித்தார்த் சுக்லா.. வெளியான கலங்க வைக்கும் தகவல்!
லெஜண்டரி காமெடி நடிகர்
தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடி நடிகர்கள் என்றால் உடனே பலரது நினைவுக்கும் வருவது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். கவுண்டமணி தனியாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், நடிகர் செந்திலும் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
தானா சேர்ந்த கூட்டம்
நடிகர் செந்தில் 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அனைத்து உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சன் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பமான ராசாத்தி சீரியலிலும் நடித்திருந்தார்.
Recommended Video
ஹீரோவாக செந்தில்
என்.எஸ்.கே, நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, சதீஷ் என காமெடி நடிகர்களும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். சிலருக்கு அது நல்லாவே செட் ஆகும். சிலருக்கு அந்த அளவுக்கு செட் ஆகாது. இந்த வரிசையில் நடிகர் செந்திலும் ஹீரோ அவதாரம் எடுக்க உள்ளார்.
இயக்குநர் யார்
நடிகர் வித்தார்த், டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்கிற வித்தியாசமான படத்தை இயக்கி பலரது பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் சுரேஷ் சங்கையா தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
சத்ய சோதனை
ஒரு கிடாயின் கருணை மனு படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரேம்ஜி நடிப்பில் சத்ய சோதனை எனும் படத்தையும் இவர் இயக்கி உள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். விரைவில் அந்த படம் வெளியாக காத்திருக்கிறது.
டப்பிங்கை முடித்த செந்தில்
இந்நிலையில், இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் செந்தில் முடித்துக் கொடுத்துள்ளார். டப்பிங்கை முடித்த செந்தில் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆயுள் கைதி
ஆயுள் தண்டனை முடிந்து தனது கிராமத்துக்கு வரும் ஒரு கைதியின் கதை தான் இந்த படத்தின் கரு என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் நய்யாண்டிகளுடன் சமூக நய்யாண்டிகளையும் சேர்த்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்த படத்தை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
70 வயதாகும் நடிகர் செந்தில் இந்த வயதில் ஹீரோவாக எப்படி திரையில் கலக்கப் போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நடிகர் கவுண்டமணியும் ஹீரோவாக 49 ஓ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஹீரோவாக எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடாத நிலையில், மீண்டும் ஓய்வில் இருக்கிறார்.
-
Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
-
சேசு மறைவு.. எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்.. வடக்குப்பட்டி ராமசாமி நடிகர் உருக்கம்
-
அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?