Don't Miss!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மனுஷன் எப்படி வாழணும்னு சொன்ன எம்.ஜி.ஆர்.. பிறந்தநாளை முன்னிட்டு வீடியோவை ஷேர் செய்த விவேக்!
Recommended Video
சென்னை: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சின்னக் கலைவாணர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
நடிகர் விவேக் ஷேர் செய்த அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.
டிரெண்டாகும் தலைவி... அதுல விட்டதை இதுல சரிகட்டிட்டாய்ங்க... அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டுகள்
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்
இலங்கையில் உள்ள கண்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்த எம்.ஜி.ஆர்., சிறு வயதில் இருந்து குடும்ப வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் நாடகங்களில் நடித்து துணை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகராக வளர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாபெரும் சாதனையை படைத்தார். எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
|
விவேக் ட்வீட்
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! வாழ்க MGR புகழ்.( அவர் பேசி இருப்பதைக் கேட்கவும்)" என ட்வீட் போட்டு அந்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
|
இனி எவரும் பிறக்கப்போவதில்லை
வறுமையில் தொடங்கி தன் கடின உழைப்பால் உயர்ந்து தான் ஈட்டிய செல்வத்தை இயன்றளவு இல்லாதோருக்கு கொடுத்து உதவி, இறந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் மக்களின் மனதில் மறையாமல் வாழ்த்து கொண்டிருக்கும் இவர்போல எவரும் இந்த நிமிடம் வரை பிறந்ததில்லை.. இனி என்றும் எப்போதும் பிறக்கப் போவதும் இல்லை. என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
|
நியாய விலைக்கடை
நியாய விலைக்கடைகளை அரசு ஒருபுறம் திறக்கிறது என்றால், அநியாய விலைக்கடைகள் இருக்கிறது என்று பொருள் என எம்.ஜி.ஆர் சொன்ன வாசகத்தை குறிப்பிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
— Venkatraman Arumugam (@VenkatramanAru2) January 17, 2020 |
இவர் போல யாரென்று
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! என்ற எம்.ஜி.ஆரின் பாடல் அடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்.
|
மூன்றெழுத்து மந்திரம்
மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் என இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் குறித்து புகழ்ந்துள்ளார்.
|
மாமனிதர்
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது புகழ் இன்றளவும் மக்களிடையே மறையவில்லை. தனது பேச்சில் சொன்னது போல எம்.ஜி.ஆருக்கு இன்றளவும் மன்றங்களும், ரசிகர்களும், மக்கள் மனதில் இடமும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த மனிதர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!