Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சமாக இருக்கிறதே: பாண்டு கவலை
மதுரை: தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றபோதிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் பாண்டு தெரிவித்துள்ளார்.
மதுரை நகைச்சுவை மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வறட்சி
நகைச்சுவை இயற்கையாக அமைய வேண்டிய விஷயம். தமிழ் திரையுலகில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் நகைச்சுவை மக்களை சென்றடைவதால் படங்களில் வரும் நகைச்சுவைக்கான முக்கியத்துவம் போய்விட்டது.
வடிவேலு
தமிழ் சினிமாவில் மதுரை வட்டார மொழி நகைச்சுவைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
நகைச்சுவை
பெரிய பெரிய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் இல்லை. நகைச்சுவை பஞ்சத்தை போக்க தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ் ஆகியோர் மீண்டும் பிறந்து வர வேண்டும்.
வசனம்
மக்களை சிந்திக்க வைக்கும்படியான வசனங்கள் நகைச்சுவை காட்சிகளில் இருக்க வேண்டும். நகைச்சுவை காட்சிகள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.