Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சமாக இருக்கிறதே: பாண்டு கவலை
மதுரை: தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றபோதிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் பாண்டு தெரிவித்துள்ளார்.
மதுரை நகைச்சுவை மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வறட்சி
நகைச்சுவை இயற்கையாக அமைய வேண்டிய விஷயம். தமிழ் திரையுலகில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் நகைச்சுவை மக்களை சென்றடைவதால் படங்களில் வரும் நகைச்சுவைக்கான முக்கியத்துவம் போய்விட்டது.
வடிவேலு
தமிழ் சினிமாவில் மதுரை வட்டார மொழி நகைச்சுவைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
நகைச்சுவை
பெரிய பெரிய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் இல்லை. நகைச்சுவை பஞ்சத்தை போக்க தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ் ஆகியோர் மீண்டும் பிறந்து வர வேண்டும்.
வசனம்
மக்களை சிந்திக்க வைக்கும்படியான வசனங்கள் நகைச்சுவை காட்சிகளில் இருக்க வேண்டும். நகைச்சுவை காட்சிகள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.