Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெண்கள் வாழ்வின் சாபமா? மயக்கம் என்ன பாடல் சர்ச்சை: புகார்
செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்துள்ள படம் 'மயக்கம் என்ன'. இந்த படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் 'அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் 'பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்' என்ற வரியும் இடம் பெற்றுள்ளது. இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.
பெண்களை கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு இந்த பாடல் முற்றிலும் எதிரானது என்றும் தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு கீதாஞ்சலி செல்வராகவன் வியப்பு தெரிவித்துள்ளார். இந்த பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வரிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஜோவியலான மூடில் பாடுவது போல உள்ளதே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல் எழுதப்படவில்லை என்றும் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பாடலை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.