Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அது முழுக்க ஒரு பொய்யான புகார்.. என் தரப்பில் தவறு இல்லை: நடிகர் ஆர்கே சுரேஷ் விளக்கம்!
சென்னை: தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் முழுக்க பொய்யானது என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக விழுப்புரத்தை சேர்ந்த வீணா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
ஆர்கே சுரேஷ் 10 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் அந்த வேதனையிலேயே தனது கணவர் ராமமூர்த்தி இறந்துவிட்டதாகவும் கூறினார்.
சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ரொமான்ஸ் செய்த வனிதா.. ஜூலியை புகழ்ந்த ராஜமாதா.. பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ!
ஆர்கே சுரேஷ் விளக்கம்
மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் கூறியிருந்தார் வீணா. இந்நிலையில் தன் மீதான புகார் முழுக்க பொய் என ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். வீணா அளித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே .சுரேஷ் நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
ஜோடிக்கப்பட்ட பொய்
தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.
எனது நாணயம் தெரியும்
மேலும் அவர் பேசும்போது,
"நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன்.
ஏன் மோசடி செய்ய வேண்டும்?
நான் விற்றேன் இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம். நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்? அதிலே நான் மோசடி செய்ய வேண்டும்? இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்?
ஆதாரங்களை அளித்துள்ளேன்
என்மீதான இந்த பொய்ப் புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்." இவ்வாறு நடிகர் ஆர்.கே .சுரேஷ் கூறினார்.