twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொது இடத்தில் புகை பிடித்தார்... புகைப்பட ஆதாரத்துடன் நடிகர் சக்தி கபூர் மீது வழக்குப் பதிவு

    |

    ஜெய்ப்பூர்: பொது இடத்தில் புகை பிடித்ததற்காக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகரான சக்தி கபூர் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரைப் புகைப்படம் எடுத்தனர்.

    Complaint against Shakti Kapoor for smoking in public

    ஊடகங்களில் வந்த அந்த புகைப்படத்தில் சக்தி கபூர் புகைப் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொது இடத்தில் புகைப்பிடித்ததாக சக்தி கபூர் மீது வழக்கறிஞர் நேம் சிங் என்பவர் பெருநகர தலைமை நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

    தனது புகாருக்கு சாட்சியமாக ஊடகங்களில் வெளியான சக்தி கபூரின் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை சுட்டிக் காட்டியிருந்தார் நேம்சிங். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கிரிஷ் குமார் ஓஜா, விசாரணையை 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A complaint has been filed with a local court in Jaipur against Bollywood actor Shakti Kapoor for allegedly smoking publicly at Sanganer airport here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X