Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோசடி செய்தாரா? 'கழுகு' கிருஷ்ணா மீது புகார்.. ஷூட்டிங்கில் இருப்பதால் அவகாசம் கேட்ட நடிகர்!
சென்னை: நடிகர் கிருஷ்ணா மீது போலீசில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கழுகு, யாமிருக்க பயமே, வீரா, யட்சன், யாக்கை, வன்மம், கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் கிருஷ்ணா.
இவர், பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர்.
டைரக்டர்ஸ் காலனி
சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் திலீப்குமார் என்பவர் மேலாளராக பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர், அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகர் கிருஷ்ணாவிடம் மேலாளராக வேலை செய்து வந்தேன்.
திருப்பித் தரவில்லை
தொழில் தொடர்பாக என்னிடம் கிருஷ்ணா பணம் கேட்டார். அதன்படி 2016 ஆம் ஆண்டு மூன்று தவணைகளாக ரூ.10.43 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணம் வாங்கிய நடிகர் கிருஷ்ணா, அதன் பிறகு பணத்தையும் திருப்பித் தரவில்லை. வட்டியும் கொடுக்கவில்லை. பல முறை பணம் கேட்டும் அவர் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார்.
போலீஸ் விசாரணை
எனவே தன்னிடம் பெற்ற ரூ.10.43 லட்சம் பணத்தை கிருஷ்ணாவிடம் பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து அசோக் நகர் போலீசார், நடிகர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணா, தற்போது படப்பிடிப்பு காரணமாக பொள்ளாச்சியில் இருப்பதாகச் சொன்னார்.
Recommended Video
அவகாசம் வேண்டும்
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி போலீசார், நடிகர் கிருஷ்ணாவுக்கு அவகாசம் அளித்துள்ளனர். அவர் நேரில் வந்து விளக்கம் அளித்த பிறகு தான் இந்த மோசடி குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.